திண்டுக்கல் : சிங்கம் பட பாணியில் வேனுக்குள் ரகசிய அறை அமைத்து 546 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி அதிகாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட தனிப்படையினர் சின்னாளப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பஞ்சம்பட்டி அருகே சேலத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) மற்றும் மைசூர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் (வயது 24) ஆகியோர் ஓட்டி வந்த ஈச்சர் லாரி வண்டியை நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தில் சிங்கம் சினிமா பட பாணியில் 6 அடி அளவில் ரகசிய அதில் அரசால் தடை செய்யப்பட்ட 546 கிலோ (36 முட்டைகள்) குட்கா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.
மேலும் விசாரணையில் பஞ்சம்பட்டி பகுதியிலுள்ள ரோஸ் பாண்டி(48) மற்றும் அவரது தம்பி ஜெகன் தினகரன் (45) ஆகியோர்களின் மளிகை கடைக்கு கொண்டுவரப்பட்டது என்பது தெரியவந்தது. இதனையடுத்து ரோஸ்பாண்டியையும் அவரது தம்பி ஜெகன் தினகரனையும் கைது செய்து சின்னாளபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மொத்தம் நான்கு நபர்களும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.