கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் ப்ரிபயர் கேம் விளையாட அண்ணன் செல்போன் தர மறுத்ததால் 6ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு கண்ணப்பன் நகர் பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி. இவருக்கு கிட்டன் அம்மாள் என்ற மனைவியும், முத்துமாரி, வேப்பிலைக்காரி, ஏசம்மா என்ற மூன்று மகள்களும், ஈஸ்வரன்,(13) அர்ஜுனன்(12) என்ற 2 மகன்களும் உள்ளனர் .
பழனிசாமியின் கடைசி மகனான அர்ஜுனன் சிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பள்ளியில் அண்ணன்
ஈஸ்வரனும் படித்துவருகிறான்.
நேற்று மாலை வழக்கம் போல் இருவரும் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்த ஈஸ்வரன், அர்ஜூனன் இருவரும் ப்ரிபயர் கேம் (free fire) விளையாட செல்போன் கேட்டு தகறாரில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து ஈஸ்வரன் செல்போன் தரமறுத்ததால் திடீரென வீட்டுக்குள் சென்று அர்ஜுனன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அர்ஜுனன் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.