வேலூர் : குடியாத்தம் அருகே சொத்து தகராறில் மாணவரை கத்தியால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த போஜனாபுரம் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 70) என்பவருக்கும் இவரது அண்ணன் மகன் மூபாரக் என்பவருக்கும் சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே முபாரக்கின் மகன் முஷாரப் (வயது 19) குடியாத்ததில் உள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்களது கிராமத்தில் உள்ள மசூதியில் தொழுகைக்காக முஷாரப் இன்று சென்றுள்ளார்.
அப்பொழுது மசூதிக்கு வந்த அவரது சின்ன தாத்தா இஸ்மாயில் முன்விரோதம் காரணமாக முஷாரப்பின் தலையில் வெட்டி உள்ளார். இதில் காயமடைந்த முஷாரப்பை உடனடியாக உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து இஸ்மாயிலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.