வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 75 கல்லூரி மாணவ மாணவிகள், மகாத்மா காந்தியின் பிரமாண்ட ஓவியத்தை வரைந்து அசத்தினர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் 15வது மாநில மாநாடு வருகின்ற 12ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை மார்த்தாண்டத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 75வது சுதந்திர தினம் மற்றும் சுதந்திர போராட்ட தியாகத்தை உணர்த்தும் விதமாகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பல்வேறு கலை நிகழ்வுகளை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியில் தனியார் கல்லூரியில் நடந்த கலை நிகழ்வில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, 75 மாணவ மாணவிகளின் கைவண்ணத்தில் மகாத்மா காந்தியின் மெகா ஓவியம் வரையப்பட்டது.
பின்னர், வண்ணம் தீட்டி பார்வைக்காக வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.