75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக கோவை மாவட்டத்தில் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் நிறுவனங்களிலும் தேசிய கொடியினை ஏற்றிட தேசிய அளவிலும் மாநில அளவிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடி ஏற்றி சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேசியக் கொடியினை வீடுகளில் ஏற்றிய பின் அதனை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் எனவும் தேசிய கொடியின் புனித தன்மையை பேணும் வகையில் எவ்வித அலட்சியமும் அவமரியாதையும் இன்றி கையாள வேண்டும் எனவும் தேசியக் கொடியை திறந்த வெளியிலோ குப்பைத் தொட்டியிலோ வயல்வெளிலோ எரியக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒத்துழைப்பு நழுகி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் 13ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடி ஏற்றி கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.