திருப்பூர் : நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 8.5 பவுன் தங்க நகைகள் திருட்டு போனதாக புகார் குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 52). இவர் திருப்பூர் – அம்மாபாளையத்தில் நகைகடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அந்த நகை கடைக்கு தங்க நாணயங்கள் வாங்குவது போல் இரண்டு வாலிபர்கள் முக கவசம் அணிந்து கடைக்குள் புகுந்துள்ளனர். அப்போது கடையில் இருந்த சின்னத்தம்பி அந்த வாலிபர்களிடம் தங்க நாணயங்களை காட்டியுள்ளார்.
பின்னர் வேறு டிசைன் உள்ள தங்க நாணயங்களை காட்டுமாறு வாலிபர்கள் கூறியுள்ளனர். சின்னத்தம்பி தங்க நாணயங்களை எடுக்க திரும்பும்பொழுது, நகைகடையில் இருந்த தங்க நாணயம் பாக்கெட்டை திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன்பூண்டி போலீசார் கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் 8.5 பவுன் அளவிலான நகைகள் திருடு போனது தெரிந்தது. பட்டப் பகலில் நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து 8.5 பவுன் தங்க நாணயங்களை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.