திருப்பூர் : பெருமாநல்லூரில், அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா என்ற போதை பொருளை விற்ற வட மாநில வாலிபர்கள் 5 பேரை பெருமாநல்லூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருப்பூர் அருகே, பெருமாநல்லூர் நால்ரோடு மற்றும் ஈட்டிவீரம்பாளையம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. பெருமாநல்லூர் போலீசார் குழுவினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது பெருமாநல்லூரில் நால்ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த 2 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். இதில், இவர்கள் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த மதன்மோகன்சாகு (வயது 26), விஸ்வநாதன்சாகு (வயது 23) என்பதும் திருப்பூர் கருவம்பாளையத்தில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது.
மேலும் பெருமாநல்லூரில் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த 3 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். இவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த குட்டுக்குமார்(வயது 22), ராஜாகுமார்(வயது 23),மற்றும் தர்மேந்திரகுமார் (வயது 22) என்பதும், இவர்கள் முட்டியங்கினறு பகுதியில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது.
குற்றவாளிகளை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சா, 1 கிலோ போதை சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.