கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் சதீஷ். கூலி தொழிலாளியான இவரது 5-வயது மகள் சாதனா.
அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார் மாலை வீட்டிற்கு வரும் சிறுமி பக்கத்து வீட்டை சேர்ந்த நிஷா என்பவரிடம் டியூசனுக்கு செல்வது வாடிக்கை.
வழக்கம் போல் புதன்கிழமை மாலை டியூசனுக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி சாதனா தனது உடம்பு வலிப்பதாக பாட்டி துளசியிடம் கூறியுள்ளார்.
அவரும் சிறுமியின் முதுகை பார்த்த போது இரத்த காயங்கள் இருந்துள்ளது இதனையடுத்து பள்ளி ஆசிரியர்களை தொடர்பு கொண்டு சிறுமி கீழே ஏதேனும் விழுந்தாரா என விசாரித்துள்ளார்.
ஆனால் அதுபோல் எந்த சம்பவமுமம் நடைபெறவில்லை என ஆசிரியர் தரப்பில் கூறப்பட்ட நிலையில் சிறுமியிடம் தொடந்து விசாரிக்கையில் டியூசன் டீச்சர் நிஷாவும் அவரது தாயாரும் தன்னை கம்பால் தாக்கியதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் சிகிட்சைக்காக சேர்ந்த தந்தை சதீஷ் சம்பவம் குறித்து தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தார்
புகாரின் பேரில் நிஷா மற்றும் அவரது தாயார் மீது சிறார் நீதிச்சட்டம் உட்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் தலைமறைவாக இருக்கும் டியூசன் டீச்சர் நிஷாவையும் அவரது தாயாரையும் தேடி வருகின்றனர்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.