திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனத்திற்காக சட்டத்துறை அமைச்சர் நேர்முக உதவியாளர் வழங்கிய பரிந்துரை கடித்தால் குளறுபடி ஏற்பட்டதால் அதிகாரிகளிடம் பக்தர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து தினமும் லட்ச கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனது குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மனை சிறப்பு தரிசனம் செய்வதற்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து பரிந்துரை கடிதம் ஒன்றை பெற்று வந்துள்ளார்.
இவ்வாறு பரிந்துரை கடிதம் பெற்று சமயபுரம் கோயிலுக்கு வந்திருந்த அவர் கோவில் டிக்கெட் கவுண்டரில் பணியில் இருந்த அறநிலையத்துறை அதிகாரியிடம் பரிந்துரை கடிதத்தை காண்பித்துள்ளார்.
அதனை அதிகாரி பார்த்தபோது கடிதத்தில் அரசு முத்திரையுடன் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சரின் இளநிலை நேர்முக உதவியாளர் விஜயராகவன் என்று தனித்துவ பரிந்துரை கடிதமாக இருந்தது.
இந்த பரிந்துரை கடிதத்தை ஏற்றுகொள்ள இயலாது ஆகையால் தரிசன கட்டணத்தை செலுத்திவிட்டு சாமி தரிசனம் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கண்ணதாசன் அதிகாரிகளிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சரின் இளநிலை நேர்முக உதவியாளர் என்ற பெயரில் கோவிலில் கொடுக்கப்பட்ட பரிந்துரை கடிதத்தால் குளறுபடி ஏற்பட்டு நடந்த வாக்குவாத சம்பவத்தினால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து வேறு வழியில்லாமல் கண்ணதாசன் தனது குடும்பத்துடன் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார்.
இதுபோன்று அமைச்சர்களின் நேர்முக உதவியாளர்கள் அரசு முத்திரையை பயன்படுத்தி தனித்துவமாக பரிந்துரை கடிதத்தை வழங்கலாமா அவ்வாறு வழங்கப்படும் கடிதங்கள் செல்லுபடி ஆகுமா என்று பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.