திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே பி.கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஆட்டுக்குட்டிசுரேஷ் என்கிற சுரேஷ் (30). நேற்று இரவு தனது மனைவியுடன் திருச்சி ஏர்போர்ட் அருகே கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் வந்த போது திடீரென அவர்களை சுற்றி வளைத்த 5பேர் கொண்ட மர்ம நபர்கள் அரிவாளால் ஆட்டுக்குட்டி சுரேசை மனைவியின் கண் முன்னே தலை மற்றும் கை பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஆட்டுக்குட்டி சுரேஷ் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். தடுக்கச் சென்ற அவர் மனைவியின் தாக்கினர். இதில் காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீரங்கம் காவல்துறையினர் அவரது மனைவியை தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: சிறுமியை காதலிப்பதாக கூறி பல முறை உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டி நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்!
சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி மற்றும் காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தலை வெட்டி சந்திரமோகன் என்பவரை பட்டப் பகலில் ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் தலையைத் வெட்டி துண்டித்து கொலை செய்யப்பட்டார்.
அதற்குப் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த ஆட்டுக்குட்டி சுரேஷ் தற்போது தான் ஜாமினில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை சம்பவத்தில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த தமிழர் தேசம் கட்சியின் நிர்வாகி நந்தகுமார் (28), விமல் ராஜ் என்ற விமல் (24), சூரிய பிரகாஷ் என்கிற சூர்யா (31), பாலகிருஷ்ணன் (29), திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த ஜம்பு என்ற ஜம்புகேஸ்வரன்(36), ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தலை மறைவாக உள்ள ஹெல்மெட் பிரசாத் என்கிற பிரசாத் (19) என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.