தூத்துக்குடி சின்ன கண்ணு புரத்தில் நண்பர்கள் மது அருந்தும் பொழுது தன்னை கொன்று விடுமாறு ஒருவர் கூறியதை தொடர்ந்து மற்றொருவர் அவர் தலையில் கல்லை போட்டு கொலை பரபரப்பு.
தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தின் பின்பகுதியில் தனது நண்பர் ஒருவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு சிப்காட் காவல் நிலையத்திற்கு ஒருவர் தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் அங்கு இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் திருமணி என்பவரது மகன் மாரிமுத்து என்பதும் இறந்தவர் தூத்துக்குடி தேவர் காலனி பகுதியைச் சார்ந்த கொம்பையா மகன் பூல்பாண்டி என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் இன்று மதிய வேளையில் சின்ன கண்ணுபுரம் பகுதியில் உள்ள பழடைந்த கட்டிடத்தின் பின்பகுதியில் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது பூல்பாண்டி தன்னை கொன்று விடுமாறு தனது நண்பர் மாரிமுத்துவிடம் தெரிவித்ததை தொடர்ந்து மது போதையில் இருந்த மாரிமுத்து பூல்பாண்டியன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மாரிமுத்துவை கைது செய்த சிப்காட் போலீசார் அவரிடம் தொடர்ந்து சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.