நம்பி அழைத்த நண்பன்.. விருந்து கொடுத்த வீட்டுக்கே ரெண்டகம் செய்த இளைஞர்.. ஷாக் சம்பவம்!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பஞ்சு. இவரது மகன் தேவேந்திரன் (30).
இவர் கடந்த 15-ஆம் தேதி தனது உறவினர் வீட்டில் நடந்த காதணி விழாவிற்கு திருமங்கலம் கரிசல்பட்டியைச் சேர்ந்த தனது நண்பர் ராஜ்குமாரை அழைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்திருந்த ராஜ்குமாரை அழைத்துக் கொண்டு பஞ்சு குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு விசேஷ வீட்டுக்கு சென்றனர்.
அப்போது தான் ஊருக்கு செல்வதாக கூறி ராஜ்குமார் விசேஷ வீட்டிலிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இந்நிலையில் மாலையில் வீட்டுக்கு தேவேந்திரன் வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.
மேலும் படிக்க: தமிழகத்தில் கல்வி காவி மயமாகவில்லை.. கலைஞர் மயமாகியுள்ளது : தமிழிசை குற்றச்சாட்டு!!
இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் பஞ்சு புகார் செய்தார். புகாரில் ராஜ்குமார் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததையடுத்து நத்தம் போலீஸார்கள் ராஜ்குமாரை விசாரணை செய்தனர்.
இதில் பணம் திருடியது தெரிய வரவே வழக்கை பதிவு செய்த போலீஸார் ராஜ்குமாரை கைது செய்தனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.