ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே இரவு நேரத்தில் அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றைக்காட்டு யானை பேருந்தின் முன் பக்கத்தை சேதம் செய்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நிற்பதும், சாலையை கடப்பதும் வாடிக்கையாக்கி வருகின்றன.
கடந்த சில நாட்களாக தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை குறிவைத்து யானைகள் சாலையிலேயே முகாமிட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு திம்பம் மலைப்பாதை வழியாக ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை திடீரென பேருந்தை வழிமறித்து நின்றது.
பின்னர் பேருந்தின் முன்பக்கம் இருந்த கண்ணாடி மற்றும் இடது பக்கத்தில் உள்ள தகரம் ஆகியவற்றை தனது தும்பிக்கையால் அடித்து சேதம் செய்தது. இதனால் பேருந்தின் உள்ளே அமர்ந்திருந்த பயணிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து யானை வனப்பகுதிக்கு சென்றது. இந்த காட்சிகளை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.