ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே இரவு நேரத்தில் அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றைக்காட்டு யானை பேருந்தின் முன் பக்கத்தை சேதம் செய்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நிற்பதும், சாலையை கடப்பதும் வாடிக்கையாக்கி வருகின்றன.
கடந்த சில நாட்களாக தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை குறிவைத்து யானைகள் சாலையிலேயே முகாமிட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு திம்பம் மலைப்பாதை வழியாக ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை திடீரென பேருந்தை வழிமறித்து நின்றது.
பின்னர் பேருந்தின் முன்பக்கம் இருந்த கண்ணாடி மற்றும் இடது பக்கத்தில் உள்ள தகரம் ஆகியவற்றை தனது தும்பிக்கையால் அடித்து சேதம் செய்தது. இதனால் பேருந்தின் உள்ளே அமர்ந்திருந்த பயணிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து யானை வனப்பகுதிக்கு சென்றது. இந்த காட்சிகளை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.