கோவையில், சார்ஜ் போட்ட படியே போன் பேசியதால் செல்போன் வெடித்துச் சிதறியதில் முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோயம்புத்தூர்: கோவை மாநகர், போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (64). இந்த நிலையில், இவர் தன்னுடைய செல்போனை நேற்றைய முன்தினம் இரவு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது, ராமச்சந்திரனுக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது.
இதனையடுத்து, செல்போனை சார்ஜில் இருந்து ஆஃப் செய்யாமலேயே, அதனை எடுத்து பேசியுள்ளார். இவ்வாறு அவர் போன் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்துள்ளது. இதில், ராமச்சந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் குடும்பத்தினர், உடனடியாக ராமச்சந்திரனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இது குறித்த தகவல் அறிந்த போத்தனூர் போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: நடத்துனரின் காதை கத்தரிக்கோலால் வெட்டிய சிறுவன்.. தென்காசியில் பரபரப்பு!
இந்த விசாரணையில், ராமச்சந்திரன் செல்போனை சார்ஜ் போட்டபடியே நீண்ட நேரம் பேசியதால், அது சூடாகி வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ராமச்சந்திரன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.