கோவையில், சார்ஜ் போட்ட படியே போன் பேசியதால் செல்போன் வெடித்துச் சிதறியதில் முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோயம்புத்தூர்: கோவை மாநகர், போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (64). இந்த நிலையில், இவர் தன்னுடைய செல்போனை நேற்றைய முன்தினம் இரவு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது, ராமச்சந்திரனுக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது.
இதனையடுத்து, செல்போனை சார்ஜில் இருந்து ஆஃப் செய்யாமலேயே, அதனை எடுத்து பேசியுள்ளார். இவ்வாறு அவர் போன் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்துள்ளது. இதில், ராமச்சந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் குடும்பத்தினர், உடனடியாக ராமச்சந்திரனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இது குறித்த தகவல் அறிந்த போத்தனூர் போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: நடத்துனரின் காதை கத்தரிக்கோலால் வெட்டிய சிறுவன்.. தென்காசியில் பரபரப்பு!
இந்த விசாரணையில், ராமச்சந்திரன் செல்போனை சார்ஜ் போட்டபடியே நீண்ட நேரம் பேசியதால், அது சூடாகி வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ராமச்சந்திரன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.