Categories: தமிழகம்

அரசு மருத்துவமனையில் பிறந்த 4 நாட்களே ஆன சிசுவை விட்டுச் சென்ற தாய் ; விசாரணையில் பரபரப்பு திருப்பம்!!

அரசு மருத்துவமனையில் பிறந்த 4 நாட்களே ஆனு சிசுவை விட்டுச் சென்ற தாய் ; விசாணையில் பரபரப்பு திருப்பம்!!

வேலூர் அரசு பென்ட்லேன்ட் மருத்துவமனையில் உள்ள புற நோயாளிகள் பிரிவில் (20.9.2023) அன்று மாலை சுமார் மூன்று மணி அளவில் பிறந்து சுமார் 4 நாட்களே ஆன ஆண் குழந்தையின் அழுகுரல் கேட்ட பொதுமக்கள் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மீட்டு அதன் தாயை தேடிய போது நீண்ட நேரம் ஆகியும் யாரும் கிடைக்காததால் இதுகுறித்து வேலூர் தெற்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் குழந்தையை மீட்ட காவல்துறையினர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக வேலூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை எடுக்க வந்ததாக கூறிய பெண்மணி தான் விருதம்பட்டை சேர்ந்தவர் என்றும் அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார்.

பின்னர் குழந்தையை உறங்க வைத்துவிட்டு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்ப வரவில்லை. மேலும் இவருக்கு அடுக்கம்பாறையில் தான் குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்ததாக அங்கு இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தகவல்களை அடிப்படையாக வைத்தும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் வேலூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

4 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

5 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

6 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

7 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

8 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

8 hours ago

This website uses cookies.