கோவை நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியதில் பின்புறம் அமர்ந்திருந்த நபர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நஞ்சுண்டாபுரம் பாலத்தில் நேற்று சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (வயது 51) மற்றும் ஓலம்பஸ் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 32) இருவரும் YAMAHA fz இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
இவர்கள் நஞ்சுண்டாபுரம் பாலத்தில் வேகமாக சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்பு சுவற்றின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வானத்தில் பின்னால் அமர்ந்திருந்த சரவணகுமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போத்தனூர் போலிசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது தூக்கி வீசப்பட்ட பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.