Categories: தமிழகம்

எலிக்கு வைத்த பொறியில் சிக்கிய அரிய வகை நாகம் : மீட்க சென்ற வனத்துறையினரை பார்த்து படமெடுத்து நின்ற காட்சி…!!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கோதுமை நாகன் என்ற அரியவகை பாம்பு பிடிபட்டது. அந்த பாம்பை மீட்டு ஊதியூரில் உள்ள காப்புக்காட்டில் வனத்துறையினர் விட்டனர்.

காங்கேயம் அருகே உள்ள பல்லக்காட்டுப்புதூர் வட்டமலை தோட்டத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. குடுப்பத்துடன் விவசாயம் செய்து வருகின்றார். மேலும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் வளர்த்து வருகின்றார்.

இந்த தோட்டத்தில் அதிக அளவில் எலி, பெருச்சாளி போன்றவைகள் கோழிகளின் முட்டைகளை உடைத்துவிடுவதாகவும் தோட்டத்தில் உள்ள பயிர்களையும் நாசம் செய்கின்றது என்று அவைகளை பிடிக்க கூண்டு வைப்பது வழக்கம்.

அவ்வாறு நேற்று இரவு சிறிய கரித் துண்டுடன் கூண்டு வைக்கப்பட்டது. பின்னர் இன்று காலை கூண்டில் எலி அல்லது பெருச்சாளி உள்ளதா என்று பார்த்துள்ளார். அதில் அறிய வகை பாம்பு இருந்துள்ளது.

இதை கண்டு அச்சமடைந்த விவசாயி பொன்னுசாமி அருகே உள்ள உறவினர்களுக்கு தெரியப்படுத்தினர். மேலும் அரியவகை பாம்பு சிக்கியது என்று ஊர் பொதுமக்கள் கூட்டமாக வந்து பார்த்துவந்தனர்.

பின்னர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் தனபால் மற்றும் பாபு இது அறியவகை கோதுமை நாக பாம்பு வகையை சேர்ந்தது என்றும் அதிக விஷத்தன்மை கொண்டது என்றும் தெரிவித்தார்.

சுமார் 2 வயதிற்கு மேல் உள்ள பாம்பு 5 அடி நீளம் உள்ளது. பின்னர் பாம்பு மாட்டிய கூண்டோடு சாக்கில் போட்டு கட்டி எடுத்து சென்ற வனத்துறையினர் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் காப்பு காட்டில் பாம்பை பத்திரமாக விட்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.