சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பிரதாப் (வயது 42). இவரது இளையமகன் தனுஷ் (வயது 18). கடந்த 2020 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்து முடித்த பின்னர் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை.
இதனால் மன உறைச்சலில் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்காக தனுஷ் தன்னை தயார்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று தனுஷின் தந்தையும் தாயும் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த தனுஷ், இந்த முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என அச்சம் கொண்டு பெல்ட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வழக்கம் போல பணியை முடித்து விட்டு வந்த அவரது தாய், கதவை திறந்து பார்க்கும் போது கமன் தனுஷ் வீட்டு மேற்கூரையில் தூக்கிட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடலை பார்த்து தனுஷின் தாய் கதற, சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தனுஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சூளைமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனுஷ் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனுஷின் செல்போனை போலீசார் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில், இரண்டாவது முறையும் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.