கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து.. நேருக்கு நேர் மோதிய கார்கள் : 4 பேர் பலி!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நெசவாளர் காலனி என்ற இடத்தில் கரூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற காரும், பவானிசாகர் நெசவாளர் காலனி அருகே தனியார் உணவகத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற காரில் பயணம் செய்த சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்த முருகன் அவரது மனைவி ரஞ்சிதா, மகன் 8 வயது அபிஷேக் மகள் 7 வயது நித்திஷா உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.
தனியார் உணவகத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த சொகுசு காரை ஒட்டி வந்த மோகன், சுஜித் விஷால் பத்ரி உள்ளிட்ட மூவருக்கு லோசான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இறந்து போன 4 பேரின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக சத்திய மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இந்த விபத்து குறித்து பவானிசாகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.