Categories: தமிழகம்

ஆட்சியர் அலுவலகத்தில் குடோனில் இருந்த வேஷ்டிகளை திருடிய வழக்கில் திருப்பம்.. கருப்பு ஆடாக இருந்த அரசு அதிகாரி கைது!!

ஆட்சியர் அலுவலகத்தில் குடோனில் இருந்த வேஷ்டிகளை திருடிய வழக்கில் திருப்பம்.. கருப்பு ஆடாக இருந்த அரசு அதிகாரி கைது!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு வட்டாச்சியர் அலுவலகத்திற்கு சொந்தமான கருவூலத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக இலவச வேஷ்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதியன்று கருவூலத்தை திறந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் மதிப்பிலான 12ஆயிரத்தி 500 இலவச வேஷ்டிகள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறை அளித்த புகாரின் கீழ் கடந்த நவம்பர் 7 ம் தேதி தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வேஷ்டிகளை 2 சரக்கு வாகனங்களில் எடுத்துசென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது விசாரணையில் 3.5லட்சம் ரூபாய்க்கு நில அளவையர் சரவணன் என்பவர் ஏற்கனவே நடந்த தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட வேஷ்டிகள் என கூறி மோசடி செய்தது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 4 பேர்களிடம் இருந்து வேஷ்டிகள் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த திருட்டு வழக்கின் முக்கிய குற்றவாளியாக நில அளவையர் சரவணன் என்பவரை தல்லாகுளம் காவல்துறையினர் தேடி வந்தனர். இதனிடையே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் தஞ்சாவூரில் பதுங்கியிருந்து சரவணனை தல்லாகுளம் காவல்துறையினர் தனிப்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சரவணின் 3 வங்கி கணக்கினை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். மேலும் சரவணனை நிரந்தர பணி நீக்கம் செய்வதற்காக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.