Categories: தமிழகம்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை சம்பவத்தில் திருப்பம்.. இளைஞர்கள் கைது : பரபரப்பு வாக்குமூலம்!

மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லபாய் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த செல்லூரைச் சேர்ந்த பாலமுருகன் (50) த/பெ. சிதம்பரம் என்பவரை நான்கு நபர்கள் கொலை செய்தது சம்பந்தமாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வழக்கின் முதற் கட்ட விசாரணையில், மகாலிங்கம் என்பவருக்கும் அவரது தம்பி மருமகன் பாண்டியராஜன் என்பவருக்கும் சொத்துப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பாண்டியராஜனுக்கு ஆதரவாக இன்று கொலை செய்யப்பட்ட அவரது சகோதரர் பாலமுருகன் (எ) பாலசுப்பிரமணியன் மேற்படி சொத்தினை சமமாகப் பிரித்து தருமாறு கேட்டு, மகாலிங்கத்திடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இப்பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு காணும் விதமாக பாண்டியராஜனின் மகள் பிரியா என்பவரை மகாலிங்கத்தின் மகன் அழகுவிஜய் என்பவருக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

மேலும் படிக்க: ஒரே நாளில் 3 கொலை வழக்குகளில் ஆஜர்.. ராக்கெட் ராஜாவால் நெல்லை நீதிமன்றத்தில் பரபரப்பு!

திருமணமான பிரியா மற்றும் அழகுவிஜய் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரியா, தனது தந்தை பாண்டியராஜன் வீட்டில் இருந்து கொண்டு அழகுவிஜய் மீது நீதிமன்றத்தில் பராமரிப்பு வழக்கும், விவாகரத்து வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 2024-ல் பாண்டியராஜன், மகாலிங்கத்திடம் தனது மகளுக்கு சேர வேண்டிய சொத்தினைப் பிரித்து தருமாறு கேட்ட போது, ஏற்ப்பட்ட பிரச்சினை தொடர்பாக பாண்டியராஜனின் புகாரின்படி மகாலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பாண்டியராஜனின் மகள் பிரியா, அவரது கணவர் அழகுவிஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மகாலிங்கம் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் பாண்டியராஜன் தனது சகோதரர் பாலமுருகனை வைத்து, ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேற்படி பாண்டியராஜன் மற்றும் பாலமுருகன் தன்னை தாக்குவதற்கு முன்பாக அவரை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்த மகாலிங்கம் மற்றும் அவரது மகள் அழகுவிஜய், அவர்களிடம் லோடு மேன்களாக வேலை செய்து வரும் (1) பரத் (2) நாக இருள் வேல் (3) கோகுல கண்ணன் மற்றும் (4) பென்னி ஆகியோருடன் சேர்ந்து சரித்திரப்பதிவேடு குற்றவாளியான பாலமுருகன் (எ) பாலசுப்பிரமணியனை கொலை செய்துள்ளனர்.

பாலமுருகனை கொலை செய்த அனைத்து எதிரிகளும் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையானது இருதரப்பினருக்குமிடையே திருமண உறவினால் ஏற்பட்ட பிரச்சினையாலும், அவர்ளுக்கிடையே சொத்துப் பங்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையாலும் நடைபெற்றதாகும். வழக்கானது புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

2 minutes ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

46 minutes ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

3 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

3 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

3 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

4 hours ago

This website uses cookies.