Categories: தமிழகம்

காதல் திருமணம் செய்த மகளையும், மருமகனையும் காருடன் கடத்திய திமுக பிரமுகர் : போலீசில் தாய் புகார்!!

கடலூர் : கடலூர் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியினரை கடத்தி சென்றதாக திமுக பிரமுகர் மீது மகனின் தாய் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே பாச்சாரப்பாளையம் பகுதியை சேர்ந்த தனஞ்செயன் என்பவரின் மகன் தாமரைக்கண்ணன் (25). இவர் சென்னையில் கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தாமரைக்கண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக பிரமுகருமான மு.அருள்முருகனின் மகள் மகாலட்சுமியை காதலித்து வந்துள்ளார். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்து வந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி அன்று இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பின்னர், காதல் தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து வடலூர் காவல் நிலைய காவல் துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். எனினும், அந்த தம்பதியினர் சென்னைக்கு சென்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், தம்பதியினர் கடந்த 31 ஆம் தேதியன்று சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு கடலூர் நோக்கி வந்துள்ளனர்.

அப்போது அவர்களை மரக்காணம் அருகே பெண் வீட்டு தரப்பினர் மடக்கி காருடன் கடத்திச் சென்று விட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து தாமரைக்கண்ணனின் தாயார் பாக்கியம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுலவகத்தில் புகார் அளித்தார். அதில், பெண்ணின் தந்தையும் திமுக பிரமுகர் ஆன அருள்முருகன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதற்கு முன்னதாக, மகாலட்சுமியை காணவில்லை என்று அருள்முருகனும் புகார் அளித்தி இருந்தது குறிப்பிடத்தக்கது பின்னர் புதிதாக திருமணம் ஆன தங்களது மகனையும், மகனின் மனைவியையும் உடனடியாக மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

KavinKumar

Recent Posts

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

7 hours ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

7 hours ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

8 hours ago

இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!

ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…

8 hours ago

7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!

கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…

9 hours ago

சோபிதா சொன்ன குட் நியூஸ்… விழா எடுத்து கொண்டாட நாகர்ஜூன் குடும்பம் முடிவு?!

நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…

9 hours ago

This website uses cookies.