சென்னையில், இரட்டைக் கொலை வழக்கில் பிணையில் சென்று தலைமறைவான பீகார் நபரை தனிப்படை போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வந்தவர்கள் மாயாண்டி (62) – வள்ளிநாயகி (60) தம்பதி. இவர்கள் இருவரும், கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வீட்டிலேயே கொலை செய்யப்பட்டனர். மேலும், வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவையும் திருடுபோனது.
பின்னர், இந்தக் கொலை தொடர்பாக துரைப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், நகை மற்றும் பணத்திற்காக இரட்டைக் கொலை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. மேலும், இதனைச் செய்தது, மாயாண்டி வீட்டில் டைல்ஸ் வேலை செய்துவந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கம்ரூல் ஆலம்(38) என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ஆலமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து, நீதிமன்ற பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்த ஆலம், விசாரணைக்காக மீண்டும் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனையடுத்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் 1ஆம் தேதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, துரைப்பாக்கம் போலீசார் மற்றும் அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் பதுங்கியிருந்த ஆலமை, போலீசார் கடந்த ஜனவரி 31ஆம் தேதி கைது செய்துள்ளனர். பின்னர், அவரை நேற்று சென்னைக்கு அழைத்து வந்த போலீசார், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கல்விக்கடன் என்ற பெயரில் சாதியப் பாகுபாடு? – அண்ணாமலை கேள்வி!
மேலும், இது தொடர்பான விசாரணையில், கடந்த நான்கு ஆண்டுகளாக போலி முகவரி மற்றும் மாறுவேடத்தில் டெல்லியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆலம் குடும்பமாக வசித்து வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.