Categories: தமிழகம்

திமுக வேட்பாளருக்கு பயம் வந்திடுச்சு… ரஜினி ரசிகர்கள் ஆதரவு எனக்கு தான் ; ஏ.சி.சண்முகம் நம்பிக்கை ..!!!

வேலூர் எம்பி தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் என் பெயரில் ஐந்து பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் 2014ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு 6 லட்சத்து 23 ஆயிரம் கோடி வரியாக பெற்றுள்ளது.
ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு ஆறு லட்சத்து 90 ஆயிரம் கோடியாக நிதியினை வழங்கி உள்ளது.

சுமார் 73 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு அதிகமாக வழங்கியுள்ளது. தமிழகத்திற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு திட்டங்களை தமிழக அரசு மாநில அரசின் திட்டங்களைப் போல செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்திற்கு மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் மானிய நிதியாக பிரதம மந்திரி கிசான் திட்டத்தில், ஒன்பதாயிரம் கோடி நிதி உதவி வழங்கியுள்ளது. ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்திற்காக 72 லட்சம் கோடி நிதி உதவி மத்திய அரசு வழங்கியுள்ளது. சிறு தொழில் துவங்க மத்திய அரசு 2.43 லட்சம் கோடி நிதியினை வழங்கியுள்ளது.

கிராமப்புற சாலைகளை மேம்படுத்தவும் புதிய சாலைகளை அமைக்கவும் 16,350 கோடி ரூபாய் நிதியினை வழங்கி உள்ளது. ஒன்றரை லட்சம் கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. மதிய உணவுத் திட்டத்திற்கு 355 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. இது போன்ற மத்திய அரசு பல்வேறு மக்களின் நல திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிகளை ஆதரித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகத்திற்கு வர உள்ளார். வேலூரிலும் பிரதமர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார், எனக் கூறினார்.

தங்களுடைய கூட்டணி கட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்ய அழைப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ரசிகர்கள் எனக்கு ஆதரவு தருவார்கள். அரசியலுக்கு வர ரஜினிகாந்துக்கு விருப்பமில்லை, என்று கூறியுள்ளார்.

ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் பெயரில் ஐந்து பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஓபிஎஸ்-க்கு மட்டும் அல்ல, என் பெயரிலும் ஐந்து பேர் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளனர்.வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தான் வெற்றி பெற்று விடுவோனோ என்ற பயத்தில் தான்
இதுபோல செய்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி நாட்டில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களின் மூலம் மக்கள் பாஜகவுக்கு அதிக அளவில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆவார், என்று கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.