கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் வீரபத்திரன் பாணியில் வேலூர் தொகுதிக்கு நான் தான் மாப்பிள்ளை என்றும், மத்தவங்க எல்லாம் தோப்புல எனக்கூறி இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வாக்கு சேகரித்தார்.
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திறந்தவேனில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க: அதிமுக – பாஜக பிரிவு என்பது அரசியல் நாடகம்… சேர்ந்து இருக்கும் போதே ஒன்னும் முடியல ; திருமாவளவன் விமர்சனம்!!
அப்பொழுது பேசிய அவர் கூறியதாவது :- நான் தான் மாப்பிள்ளை. நான் தான் உங்கள் தொகுதிக்கு வேலைக்காரன், உங்கள் அன்பின் அடிமை என்னை தேர்ந்தெடுங்கள். இந்த நாய்க்கு ஒட்டு போட்டால் நன்றாக குறைப்பேன். இந்த கழுதைக்கு ஒட்டு போட்டால் சாப்பிடுவேன். இந்த மாட்டிற்கு ஒட்டு போட்டால் நன்றாக பால் கொடுப்பேன்.
கதிர் ஆனந்த நல்ல மனிதர். அமெரிக்காவில் போய் படித்து விட்டு வந்தார். அவர் நன்றாக இருக்கட்டும். அமெரிக்காவில் படித்துவிட்டு வந்து இங்கு ஓட்டு கேட்கிறார். 5 வருடம் எம்பியாக இருந்தார். அப்போது ஒன்றும் புடுங்க வில்லை அல்லவா..? அப்பா சொத்தை சாப்பிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இங்கே பார் நான் தான் வருவேன்.
மேலும் படிக்க: மன்னிப்பு கேட்டா மட்டும் போதுமா… நாங்க ஏன் ஆக்ஷன் எடுக்கக்கூடாது ; பாபா ராம்தேவ்க்கு நீதிமன்றம் குட்டு!
மேலும், உங்களுக்கு வேலைக்காரனாக வருவேன். என் சட்டையை பிடித்து நீங்கள் கேள்வி கேட்கலாம். நான் வெளியே சுற்றுபவன், நான் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன். சினிமா நடித்து எனக்கு வெறுத்துப் போய்விட்டது, எனக் கூறினார்.
அப்போது, ஏய் வீரபத்ரா இத்தனை வருடம் சினிமாவில் நடித்துவிட்டு, இப்பொழுது வேலூரில் வந்து தேர்தலில் நிற்கிறாயே என கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த் பாணியில் அருகில் இருந்தவர் கேள்வி கேட்டார். உடனே தனது பாணியில் வீரபத்திரன் படத்தில் சிரித்தது போல் சிரித்து, ஒரு மாடு ரெண்டு பீஸ் ஆச்சு, அந்த பக்கம் திமுகவும், இந்தப் பக்கம் அதிமுகவும் நடுவுல ரெண்டு கால வச்சுகிட்டு ஒன்னு வருது. அது பாஜக. எத்தனை பீஸ்ஸாக போறானுங்கன்னு எனக்கு தெரியல.
ஏன்னா இந்த தொகுதியில் நான்தான் மாப்பிள்ளை. மத்தவங்க எல்லாம் தோப்புல. நான் வருவேன், மோடி வாயில் வடை சுடுகிறார், என வீரபத்திரன் பாணியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.