கன்னியாகுமரி: நடிகர் சூர்யாவின் 41 ஆவது படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் திங்கள்கிழமை தொடங்கியது.
இயக்குநர் பாலா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் பூஜை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் தொடங்கியது. நடிகர் சூர்யாவுக்கு நந்தா படத்தின் மூலம் சரியான திசையை காட்டியவர் இயக்குநர் பாலா. நந்தாவுக்கு பிறகு பிதாமகன் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார் சூர்யா. பின்னர் பாலா தயாரித்த மாயாவியிலும் சூர்யா நடித்திருந்தார்.
இந்நிலையில், பிதாமகன் திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலாவின் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்தின் பூஜை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா, நடிகை கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 45 நாள்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியை அடுத்த கோவளம் மீனவ கிராமத்தில் நடைபெறுகிறது. இதற்காக படக்குழுவினர் இப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
This website uses cookies.