கோவை கரடிமடையில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனிதீர்மானம் கொண்டுவருவோம் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை கரடிமடையில் சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் திமுகவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் அவரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நிவாரணம் வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், கோவையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும், எங்கு பார்த்தாலும் கள்ளச்சாரயம் விற்பனை நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக கோவை கரடிமடையில் உள்ள அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், டாஸ்மாக்கில் மது கூடுதலாக விற்பனை செய்வதை கேள்வி கேட்டதற்காக, அந்த டாஸ்மாக் நடத்தும் திமுகவை சேர்ந்த ராகுல் ,கோகுல் என்பவர் தாக்கி அவர் பலியாகியுள்ளார்.
இவ்வளவு தைரியாமாக இந்த கொலையை நிகழ்த்தியுள்ளதாகவும் இந்த கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு ஆதரவாக போலீஸ் துணையாக உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கோவையில் கள்ளதனமாக மதுவிற்பனையை தடுக்காத காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அதிமுகவினர் போராடுவோம் என தெரிவித்த எஸ்.பி.வேலுமணி,
ஜனநாயக நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும்,
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனிதீர்மானம் கொண்டுவருவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
This website uses cookies.