கோவை கரடிமடையில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனிதீர்மானம் கொண்டுவருவோம் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை கரடிமடையில் சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் திமுகவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் அவரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நிவாரணம் வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், கோவையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும், எங்கு பார்த்தாலும் கள்ளச்சாரயம் விற்பனை நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக கோவை கரடிமடையில் உள்ள அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், டாஸ்மாக்கில் மது கூடுதலாக விற்பனை செய்வதை கேள்வி கேட்டதற்காக, அந்த டாஸ்மாக் நடத்தும் திமுகவை சேர்ந்த ராகுல் ,கோகுல் என்பவர் தாக்கி அவர் பலியாகியுள்ளார்.
இவ்வளவு தைரியாமாக இந்த கொலையை நிகழ்த்தியுள்ளதாகவும் இந்த கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு ஆதரவாக போலீஸ் துணையாக உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கோவையில் கள்ளதனமாக மதுவிற்பனையை தடுக்காத காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அதிமுகவினர் போராடுவோம் என தெரிவித்த எஸ்.பி.வேலுமணி,
ஜனநாயக நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும்,
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனிதீர்மானம் கொண்டுவருவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.