டாஸ்மாக்கில் கூடுதல் விலை… தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி கொலை : திமுக மீது எஸ்பி வேலுமணி பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2023, 12:27 pm
SP Velumani -updatenews360
Quick Share

கோவை கரடிமடையில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனிதீர்மானம் கொண்டுவருவோம் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை கரடிமடையில் சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் திமுகவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் அவரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நிவாரணம் வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், கோவையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும், எங்கு பார்த்தாலும் கள்ளச்சாரயம் விற்பனை நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக கோவை கரடிமடையில் உள்ள அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், டாஸ்மாக்கில் மது கூடுதலாக விற்பனை செய்வதை கேள்வி கேட்டதற்காக, அந்த டாஸ்மாக் நடத்தும் திமுகவை சேர்ந்த ராகுல் ,கோகுல் என்பவர் தாக்கி அவர் பலியாகியுள்ளார்.

இவ்வளவு தைரியாமாக இந்த கொலையை நிகழ்த்தியுள்ளதாகவும் இந்த கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு ஆதரவாக போலீஸ் துணையாக உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கோவையில் கள்ளதனமாக மதுவிற்பனையை தடுக்காத காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அதிமுகவினர் போராடுவோம் என தெரிவித்த எஸ்.பி.வேலுமணி,
ஜனநாயக நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும்,
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனிதீர்மானம் கொண்டுவருவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Views: - 283

0

0