தஞ்சையில் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு (38). இவருக்கு சரண்யா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் அதிமுகவில் நகர இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும் இருந்து வந்தார். 2021ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும், அதிமுகவிலும், வணிகர் சங்க பேரமைப்பிலும் தீவிரமாக பணியாற்றி வந்தார்.
தேர்தல் சமயத்தில் நடந்த முன்விரோதம் காரணமாக 2022ம் ஆண்டு நடந்த பாரதிராஜா என்பவரை தாக்கிய வழக்கில் பிரபுவும் சிறை சென்று வெளியே வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு பழமார்நேரி சாலையில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு அருகில் இருந்த கடையில் அமர்ந்திருந்தார். அப்போது, பைக்கில் வந்த 4 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் இறங்கி, தாங்கள் கொண்டு வந்திருந்த பயங்கர ஆயுதங்களால் பிரபுவை சரமாரியாக வெட்டினர். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, கொலை செய்யப்பட்ட பிரபுவின் மனைவி சரண்யா திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். பழமார்நேரி சாலையில் உள்ள பாரதிராஜாவுக்கும், தனது கணவருக்கும் இடம் குறித்து பிரச்சனை இருந்து வந்ததாகவும், பாரதிராஜா, மணிகண்டன், ரமேஷ் ,மஸ்தான் என்கிற நாகராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து கணவரை வெட்டி கொலை செய்து விட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே, பிரபுவின் கொலை சம்பவத்தை கண்டித்து திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பகுதியில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதன்காரணமாக, திருக்காட்டுப்பள்ளி நகரில் பதட்டமான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.