அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குபதிவு செய்ததை கண்டித்து,சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை விமான நிலையத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, அமமுக நிர்வாகி எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனிடைய அதிமுக கட்சி நிர்வாகிகள் அவதூறு பேசிய நபர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக மாநகர் மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது பொய் வழக்கு போட்டு திமுக வஞ்சிப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், திமுக அரசு போட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை பேட்டியளித்தார். அப்போது, அதிமுக,பாஜக நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திமுக கூட்டணி கட்சியின் திமுக ஆட்சி குறித்து விமர்சிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், கூட்டணி கட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திமுக ஆட்சி குறித்து விமர்சித்துள்ளார் என்றும்,. ஆட்சியாளர்களை குறைசொல்லி உள்ளதாக கூறினார்.
மேலும், ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி எதுவாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்களது கருத்துக்களையும், மாறுபாடுகளையும் குறிப்பிட்டு சொல்வதில் எந்த தவறும் இல்லை, என தெரிவித்தார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.