தேனி : பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசி வருவது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் பெரியகுளம் ஓ.பி.எஸ்.பண்ணை வீட்டில் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அப்போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அத்தனை பேரையும் கட்சியில் இணைக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் எந்தவித நிபந்தனையுமின்றி கட்சியில் இணைக்க வேண்டும் எனஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர் செல்வத்திடம் அளிக்கப்பட்டதாக மாவட்ட செயலாளர் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் ஆர் பி உதயகுமார் தேனி மாவட்ட செயலாளர் செய்யது கான் முன்னாள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மற்றும் முருக்கொடை ராமன் ஆகியோர் சந்தித்து வருகின்றனர்.
மேலும் செல்லூர் ராஜ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.