அதிமுக நிர்வாகி திடீர் கைது… பொள்ளாச்சி டூ வேலூர் : நடந்தது என்ன? பரபரக்கும் பின்னணி!!
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அ.தி.மு.க ஐ.டி நிர்வாகியை, வேலூர் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.
கடந்த 29.03.2023 அன்று காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது, நான் நீண்ட நெடுங்காலம் தி.மு.க-வில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என ஒருவரி எழுதினால் போதும் என்று உருக்கமாகப் பேசினார்.
அமைச்சர் துரைமுருகன் பேசிய இந்த வார்த்தைகளை அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகியான பொள்ளாச்சி அருண்குமார் என்பவர், துரைமுருகன் புகைப்படத்தை தவறாக சித்தரித்து தனது ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.
இந்தப் பதிவு வைரலான நிலையில், காட்பாடி திமுக வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காட்பாடி காவல் துறையினர், அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகி பொள்ளாச்சி அருண்குமாரை பொள்ளாச்சியில் வைத்து கைது செய்தனர்.
பின்னர் காட்பாடி காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்து காட்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக பொள்ளாச்சி அதிமுக ஐ.டி விங் நிர்வாகி அருண்குமார் கைது செய்து காட்பாடி காவல் நிலையம் அழைத்து வருவதை அறிந்த வேலூர் மாநகர அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு தலைமையிலான அதிமுகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினர் காவல் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பின் ஆளும்கட்சியை எதிர்த்து கருத்து கூறுபவர்களை ஒடுக்குவதற்காக பொய்வழக்குகளை போட்டு கைது செய்வது தொடர்கதையாக உள்ளது.
இதே நிலை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்ட போது, சம்மபந்தப்பட்ட கட்சியினர் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கண்கூடு என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.