Categories: தமிழகம்

இனி அதிமுக என்றால் எடப்பாடியார் மட்டுமே… கையெழுத்து கூட போட முடியாது : பொள்ளாச்சி ஜெயராமன் பரபர பேச்சு!!

திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் அதிமுக திருப்பூர் மாவட்டம் மகளிரணி தலைவி சுந்தராம்பாள் கேசவன் ஏற்பாட்டில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா ராயபுரத்தில் நடைபெற்றது.

இந்த விழாவை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி.வி. ஜெயராமன் அவர்கள் ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணி, மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இதையடுத்து பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்களுக்கு நீர் மோர், தண்ணீர், பழங்கள் உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி முதல் முறையாக திருப்பூரில் ராயபுரம் பகுதியில் இன்று நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டது. நிர்வாகிகள் அனைவரும் அனைத்து பகுதிகளிலும் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும் சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு வழங்குவதை கருத்தில் கொள்ள வேண்டும், கருணாநிதியின் பக்தன் என்று சொன்னவர்களுக்கு எல்லாம் காலம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

மறைந்த முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் ஆத்மா அவர்களை சும்மா விடாது, இனி அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்கள் மட்டும்தான், மேலும் கட்சிக்கொடியை இனி யாரும் பயன்படுத்த முடியாது,
கையெழுத்திடவும் முடியாது. இனி வரும் காலம் எம்.ஜி.ஆர் வழியில் அம்மா வழியில் எடப்பாடியார் மீண்டும் முதல்வராகி தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சி வழங்குவார் என்று முன்னாள் துணை சபாநாயகர் பேசினார்.

அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களுக்கு அங்கீகாரம் அளித்ததற்கு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இந்த நிகழ்வில் அதிமுக திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், பழனிச்சாமி உட்பட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதல் திருமண விவகாரத்தில் திருப்பம்… எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியின் ஆதரவாளர் ‘ஸ்வீட்’ குமார் தலைமறைவு!

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…

6 minutes ago

பிச்சைக்காரங்களுக்கு குபேரா பட டிக்கெட் இலவசம்? கவனத்தை ஈர்த்த டிவிட்டர் பதிவு? புதுசா இருக்கே!

பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…

28 minutes ago

முருகர் மாநாட்டுக்கு மனித சங்கிலி நடத்தும் திருமாவளவன் ஏன் வேங்கைவயலுக்கு நடத்தவில்லை? தமிழிசை கேள்வி!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…

30 minutes ago

கதை நல்லா இருந்து என்ன பயன்? அந்த விஷயத்துல கோட்டை விட்டாங்களே- குபேரா முழு விமர்சனம்

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…

2 hours ago

சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

2 hours ago

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த சிறுமி… தோளில் தூக்கிக் கொண்டு அலைந்த தாய் : கடலூரில் அதிர்ச்சி!

கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…

3 hours ago

This website uses cookies.