பழனி நகரில் பல இடங்களில் ஏர்டெல்,வோடோபோன் இணையதள சேவை பாதிக்கப்பட்டதால் பயனாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களில் முதன்மையான தளமான பழனியில், தனியார் நிறுவனங்களான ஏர்டெல், வோடோபோன் இணையதள சேவை பல நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. பழனி பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், ரயில் நிலைய சாலை, மலை அடிவாரம் மற்றும் மலை மீது என பல இடங்களில் இணையதள சேவை முழுமையாக பெற முடியாத நிலை உள்ளது.
இணையதள சேவை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பயனாளர்கள் பழனியில் செயல்படுத்து வரக்கூடிய அந்த நிறுவனங்களிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். பயனாளர்கள் புகார் மீது தனியார் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஏர்டெல், வோடபோன் போன்ற அனைத்து நிறுவனங்களின் சிம்கார்டை பயன்படுத்தக்கூடிய பயனாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், கடந்த சில மாதங்களாக பழனியில் திடிரென உருவான தனியார் நிறுவனங்கள் வீடுகளுக்கு தனியார் ஊழியர்கள் மூலமாகவும், வயர்கள் மூலம் இன்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது. வயர் மூலம் இன்டர்நெட் சேவையை மக்கள் வீடுகளுக்கு பெற வேண்டும் என்பதற்காக, இதுபோன்று செயற்கையாக இணையதள பாதிப்பை நிறுவனங்கள் ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
3ஜி, 4ஜி, 5ஜி என அழைக்கற்றலை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் பழனி போன்ற சுற்றுலா தளத்தில் தனியார் நிறுவனங்கள் செல்போன் சேவையை முழுமையாக அளிக்காதது பயனாளர்களுக்கு கடும் அதிருப்தி அடைய செய்துள்ளது. ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் உடனடியாக இணைய சேவை பாதிப்பை சரி செய்து கொடுக்க வேண்டும், என பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.