தஞ்சை : தஞ்சை அருகே தனியார் பள்ளி ஆசிரியர் சக மாணவர்கள் முன் பிளஸ்-2 மாணவியை தகாத வார்த்தைகளை கூறி திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சையை அடுத்துள்ள பருத்தியப்பர் கோயில் பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் பணிபுரியும் கருணாநிதி என்பவரின் 17 வயது மகள் ஒரத்தநாடு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஒரத்தநாடு போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் மாணவியை பள்ளியின் கணித ஆசிரியர் சசிகுமார் என்பவர் சக மாணவர்கள் முன் தகாத வார்த்தைகளை கூறி திட்டியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்வதாக தன்னுடன் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு வாட்ஸ்- அப் மூலம் மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியர் சசிகுமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
This website uses cookies.