திருவள்ளூர் ; செங்குன்றத்தில் சினிமா படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கியதில் லைட்மேன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தனியார் அரிசி ஆலை ஒன்றில் அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் “அகரம் காலனி” என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்துள்ளது.
நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்த போது, காடா லைட் உபகரணத்தை லைட்மேன் சண்முகம் மற்றும் ரஞ்சித் ஆகியோர் தள்ளி செல்லும் போது, காடா லைட் தடுமாறி அந்த தெருவில் இருந்த உயரழுத்த மின் கம்பியில் பட்டதில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் இருவரும் காயமடைந்த நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்த போது, லைட்மேன் சண்முகம் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து செங்குன்றம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர், லைட்மேன் சண்முகத்தின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு லைட்மேன் ரஞ்சித்க்கு காலில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.