பேரூராட்சியில் முறைகேடுகளை தட்டி கேட்டதால் அவதூறு பரப்புவதாகக் கூறி, ஆரணி பேரூராட்சியின் திமுக பெண் கவுன்சிலர் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் 13-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த பொன்னரசி நிலவழகன். இவர் கடந்த சில நாட்களாக ஆரணி பேரூராட்சியில் முறைகேடு நடப்பதாக, பேரூராட்சி மன்ற கூட்டத்திலும், அதிகாரிகளிடமும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதன் காரணமாக திமுக பெண் கவுன்சிலர் பொன்னரசி மீது பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தன்மீது பழி வாங்கும் நடவடிக்கையாக அவதூறு பரப்புவதால் மன உளைச்சலில் இருந்த திமுக பெண் கவுன்சிலர் பொன்னரசி அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் பெண் கவுன்சிலரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் திமுக பெண் கவுன்சிலர் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரூராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை தட்டிக்கேட்ட பெண் கவுன்சிலர் மீது அவதூறு பரப்புவதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.