வேலூர் : ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வரும் நபர்களை நூதன முறையில் ஏமாற்றி தொடர்ந்து பணத்தை திருடி வந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 19 வகையான வங்கிகளின் 140 கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
வேலூர் தெற்கு காவல் துறையின் குற்றப்பிரிவு காவலர்கள் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள EB அலுவலகம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், காவலர்களை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு, எதையோ தூக்கி வீசியுள்ளார்.
சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை பிடித்து விசாரித்த போது, அவர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், அவர் வீசியது ஏடிம் கார்டுகள் என்றும் தெரியவந்தது.
இது குறித்து காவலர்கள் கூறுகையில், கைதான நபர் வடுங்கன்தாங்கள் பில்லாந்திப்பட்டு பகுதியை சேர்ந்த கூலி தொழில் செய்யும் சுரேஷ்(36) என்றும், இவர் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வரும் நபர்களை (எடுக்க தெரியாத நபர்களை) ஏமாற்றி போலியான மற்றும் காலாவதியான ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு நூதன முறையில் அவர்களை ஏமாற்றி அவர்களின் கார்டு மூலம் பணத்தை தொடர்ந்து திருடி வந்ததாகவும், சித்தூர் பகுதியில் அதிக அளவில் இது போன்ற திருட்டில் ஈடுபட்டதாகவும், வேலூர், காட்பாடி, பாகயம், கே.வி.குப்பம் போன்ற பகுதிகளிலும் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக கூறினர்.
இதனையடுத்து, கைதான சுரேஷிடம் இருந்து 19 வகையான வங்கிகளின் 140 ஏடிஎம் கார்டுகள், 35 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின் வேலூர் ஜெஎம் 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.