Categories: தமிழகம்

சாலை பணியின் போது பணியாளர் மீது தாக்குதல் : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம்!!

சாலை பணியின் போது பணியாளர் மீது தாக்குதல் : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம்!!

ஒப்பந்த பணி செய்துவரும்‌ சமயத்தில்‌ தாக்குதல்‌ நடத்தியவர்கள்‌ மீது நடவடிக்கை வலியுறுத்தி நாளை ஒப்பந்ததார்கள்‌ சார்பாக ஒரு நாள்‌ வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.

கோவை மாநகராட்சியின்‌ 92வது வார்டு பகுதியில்‌ உள்ள குனியமுத்தூர்‌ காமராஜர்‌ வீதியில்‌ சாலை பணி நடந்து வருகிறது. வெற்றி கன்ஸ்டிரக்சன்‌ நிறுவனத்தினர்‌ பணி நடத்தி வருகிறார்கள்‌. நேற்றை தினம்‌பணி நடந்து கொண்டிருந்த போது, அதே பகுதியில்‌ வசித்து வரும்‌ நாகராஜ்‌ என்பவர்‌ அங்கே வந்துள்ளார்‌.

அவர்‌, தனது வீட்டிற்கு ரேம்ப்‌ அமைத்து தர வேண்டும்‌ என கேட்டார்‌. அப்போது சாலை பணியில்‌ இருந்த நிறுவனத்தின்‌ மேற்பார்வையாளர்‌, ஊழியர்கள்‌ தற்போது சாலை வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்‌ அது முடிந்த பின்னர்‌ ரேம்ப்‌ அமைத்து தருவதாக கூறியுள்ளனர்‌.

ஆனால்‌ நாகராஜ்‌ இதனை ஏற்காமல்‌ ரேம்ப்பை அமைத்து விட்டு சாலையை போடு என வாக்குவாதத்தில்‌ ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த நாகராஜின் மகன் ஒப்பந்த நிறுவன ஊழியரான சவுந்தரராஜ்‌ என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காயமடைந்த அவர்‌ மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்‌. மேலும் தாக்குதல்‌ நடத்தியவர்கள்‌ மீது நடவடிக்கை எடுக்க கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பாக குனியமுத்தூர்‌ போலீசில்‌ புகார்‌ அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணிகள்‌ செய்யும்‌ இடங்களில்‌ நடத்தப்படும்‌ தாக்குதல்‌ தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடமும்‌ புகார்‌ தெரிவிக்கப்பட்டது. இனி இதுபோன்ற செயல்பாடுகள்‌ இனி வரும்‌ காலங்களில்‌ தொடர கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது.

ஒப்பந்த நிறுவனத்தினரை தாக்கியது சரியான செயல்‌ அல்ல. பணிகளில்‌ குறைபாடு இருந்தால்‌ மாநகராட்சி ஆணையாளர்‌, மண்டல அதிகாரிகள்‌ மற்றும்‌ பொறியாளர்களிடம்‌ புகார்‌ தரலாம்‌ அதை விட்டு விட்டு வேலை செய்யும்‌ நிறுவனத்தினரிடம்‌ வாக்குவாதம்‌ செய்வது வேலையை நிறுத்துவது போன்றவை சமீபகாலமாக நடைபெறுவந்தது.

அதன்‌ உச்சகட்டமாக ஊழியர்‌ மீது தாக்குதல்‌ நடத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள்‌ பணி செய்யும்‌ இடத்திற்கு செல்லும்‌ போது அவர்கள்‌ மீதும்‌ இதுபோன்ற தாக்குதல்‌ நடத்த கூடிய அசாதாரண சூழ்நிலை உள்ளது.

எனவே புகார்களை பொதுமக்கள்‌ முறைப்படி அதிகாரிகளிடம்‌ தெரிவிக்க வேண்டும்‌. அதை விட்டுவிட்டு ஒப்பந்ததார்களிடம்‌ வாக்குவாதம்‌ செய்வது பணிகளை நிறுத்துவது போன்றவை சமிபகாலமாக அதிகரித்து வருகிறது, அதன்‌ உச்சகட்டமாக ஒப்பந்ததாரரின்‌ ஊழியரின்‌ மீது தாக்குதல்‌ நடத்தப்பட்டது இது மிகவும்‌ கண்டிக்கதக்கது கண்டனத்திற்குறியது.

எனவே நாளை (06.10.2023 ம்‌ தேதி) மாநகராட்சி பகுதியில்‌ நடைபெறும்‌ அனைத்து பணிகளையும்‌ நிறுத்தி ஒரு நாள்‌ அடையாள வேலை நிறுத்தம்‌ செய்யவுள்ளோம்‌. மேற்படி நபரின்‌ மீது நடவடிக்கை எடுக்காவிடில்‌ வேலை நிறுத்தம்‌ தொடரும்‌.

போர்வெல்‌ இயக்கம்‌ மற்றும்‌ மிக அத்தியாவிசய பணிகள்‌ தவிர வேறு அனைத்து பணிகளும்‌ நடைபெறாது. சங்கத்தினர்‌ இந்த பிரரசனைகளில்‌ ஒற்றுமையாக இருந்து தீர்வு காண வேண்டும்‌. வணக்கத்திற்குரிய மேயர்‌ அவர்கள்‌, துணை மேயர்‌ அவர்கள்‌, அனைத்து மண்டல தலைவர்கள்‌ மற்றும்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ ஓப்பந்ததார்கள்‌ பணி செய்யும்‌ போது எந்தவித இடையூறும்‌ ஏற்படாதவாறு எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென அவர்களிடத்திலும்‌ கோரிக்கை வைத்துள்ளோம்‌.

இது கண்டனத்திற்குரிய மிக மோசமான செயலாகும்‌. இனிவரும்‌
காலங்களில்‌ இது போன்று அசம்பாவிதம்‌ எங்கும்‌ நடைபெறாதவாறு
பார்த்துக்‌ கொள்ளுமாறு சங்கத்தின்‌ மூலம்‌ கோரிக்கை வைக்கப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

23 minutes ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

24 minutes ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

58 minutes ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

1 hour ago

மக்களை ஏமாற்ற ரோடு ஷோ நடத்துகிறார்.. முதலமைச்சருக்கு எதுவும் தெரியல : அன்புமணி குற்றச்சாட்டு!

வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…

2 hours ago

எனக்கும் அந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க- நெட்டிசன்களின் வலையில் சிக்கிய அதிதி பாலன்…

மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…

3 hours ago

This website uses cookies.