Categories: தமிழகம்

வீட்டில் சுவர் மீது ஏறி குதித்து திருட முயற்சி… வீட்டு உரிமையாளரிடம் சரணடைந்த விநோத திருடன்!!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ராசி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சரண்யா (வயது 32). இவர் தனது மகன் லிசாந்த் (வயது 7) மற்றும் மாமியார் சுசீலா (வயது 56) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

சரண்யாவின் கணவர் ரமேஷ் (வயது 36) சிங்கப்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆக பணியாற்றி வருகிறார்.

பெண்கள் தனியாக இருக்கும் வீட்டை நோட்டமிட்டு திருடலாம் என குறிவைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சுற்றி நோட்டமிட்ட திருடர்கள் இந்த வீட்டை குறி வைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் பகலில் வீட்டின் முன்புறம் செல்லும் மூன்று இணையதள (இன்டர்நெட்) ஒயர்களை துண்டித்துள்ளனர். இதன் மூலம் சிசிடிவி கேமரா இணைப்பு துண்டிக்கப்படும் என நினைத்து, இந்த ஒயர்களை வெட்டி விட்டு, அதன் பிறகு அன்று இரவே வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து ஒருவன் உள்ளே சென்றுள்ளான்.

வீட்டின் உள்ளே இருந்த சரண்யா தனது கைபேசியில் யாரோ மர்ம நபர் சுற்றுச்சுவரை ஏறி உள்ளே வருவது தெரிந்து, உடனடியாக அனைத்து விளக்குகளையும் எரிய விட்டுள்ளார். அருகாமையில் இருக்கும் வீடுகளுக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தெரிந்து கொண்ட திருடன் உடனடியாக வீட்டை சுற்றி பின்புறமாக சென்று மீண்டும் மதில் சுவர் ஏறி எட்டி குதித்து தப்பித்து சென்று விட்டான்.

அதன் பிறகு இந்த சிசிடிவி ஃபுட்டேஜ் பதிவில் திருடன் எட்டி குதித்து உலாவி சென்றது இருப்பதை உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பி, இவன் யாரென்று தெரிய வேண்டும் என்பதற்காக விசாரித்துள்ளனர்.

அப்பொழுது இந்த தகவலை தெரிந்து கொண்ட சூரி பள்ளம் என்ற பகுதியில் வசிக்கும் சென்ட்ரிங் கூலி தொழிலாளி பிரபு (வயது 26) இந்த தகவலை தெரிந்து கொண்டு, இன்று அதிகாலை சரண்யாவின் வீட்டுக்கு தாமாகவே முன்வந்து “நான்தான் சுற்றுச்சுவர் எறி குதித்தவன். என்னை மன்னித்து விடுங்கள். தயவு செய்து காவல் நிலையத்தில் புகார் தந்து விடாதீர்கள் என கெஞ்சியுள்ளார்.

உடனடியாக சரண்யா சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர். விசாரணையில் பிரபுவுடன் சேர்ந்து மேலும் இருவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

இதனால் உடனடியாக பிரபுவை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பிரபு உடன் சம்பந்தப்பட்ட மேலும் இருவர் யார்? இதுபோன்ற எத்தனை குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இவனுடன் குற்றச் செயலில் ஈடுபட்ட பிரபுவின் கூட்டாளி, வடவள்ளி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரை பொதுமக்களே தற்பொழுது பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

வீட்டின் முன்பு வெட்டப்பட்ட இணையதள ஒயர்களையும் பறிமுதல் செய்துள்ளனர். பெண்கள் தனியாக இருந்த வீட்டை குறி வைத்து, திருட முயற்சித்த போது சிசிடிவி கேமராவில் பதிவாகி விட்டோம் என்ற பயத்தில் திருடனே தானே ஒப்புக்கொண்டு வீட்டு உரிமையாளரிடம் வந்து சரணடைந்த வினோதமான விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

18 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

19 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

20 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

20 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

21 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

21 hours ago

This website uses cookies.