திருப்பூர் : பல்லடத்தில் தனியார் (ஆக்ஸிஸ்) வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு எதிரே தனியார் (ஆக்ஸிஸ்) வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியின் ஒரு பகுதியில் ஏ.டி.எம் செண்டர் செயல் பட்டு வருகிறது.
ஏ.டி.எம் மையத்திற்கு இன்று காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கும்,வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் ஏ.டி.எம் மையத்துக்கு வந்த மர்ம நபர்கள் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இயந்திரத்தில் பணம் வைத்திருந்த பெட்டியை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கை விட்டு திரும்பி சென்றதும் தெரிய வந்தது. மேலும் வங்கி மற்றும் அப்பகுதியிக் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைபற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.