திருப்பூர் : பல்லடத்தில் தனியார் (ஆக்ஸிஸ்) வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு எதிரே தனியார் (ஆக்ஸிஸ்) வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியின் ஒரு பகுதியில் ஏ.டி.எம் செண்டர் செயல் பட்டு வருகிறது.
ஏ.டி.எம் மையத்திற்கு இன்று காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கும்,வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் ஏ.டி.எம் மையத்துக்கு வந்த மர்ம நபர்கள் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இயந்திரத்தில் பணம் வைத்திருந்த பெட்டியை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கை விட்டு திரும்பி சென்றதும் தெரிய வந்தது. மேலும் வங்கி மற்றும் அப்பகுதியிக் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைபற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.