திண்டுக்கல் : சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஏடிஎம்-ல் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள டிஐஜி அலுவலகம் அருகே ஆயுதப்படை மைதானம் நுழைவுவாயிலில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்-ல் நேற்றிரவு மர்ம நபர்கள் சிசிடிவி கேமராவின் இணைப்பை துண்டித்து விட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர். நீண்ட நேரமாக ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை ஏடிஎம் மையத்திற்கு வந்த பொதுமக்கள் ஏடிஎம் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் டிஐஜி அலுவலகம் அருகாமையில் நடந்த இந்த திருட்டு முயற்சி சம்பவமானது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
This website uses cookies.