கோவை: ஈச்சனாரி அருகே நடைபெற்ற மாவட்ட காவலர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாநில காவல் துறை இயக்குனர் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் போலீஸ் காவலர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்ட போலீஸ் காவலர்களுக்கான மாரத்தான் போட்டி கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்றது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இந்த மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். கோவை ஈச்சனாரி பகுதியில் இருந்து மதுக்கரை வரை சுமார் பத்து கிலோமீட்டர் மாரத்தான் நடைபெற்றது.
ஆண் காவலர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், பெண் காவலர்களுக்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் என 2 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் சுமார் 45 பெண் காவலர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த மாவட்ட எஸ்பி செல்வரத்தினமும் இந்த மாரத்தான் ஓடினார். முதல் மூன்று இடங்களை பிடித்த காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.