திருச்சி : திருச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி தில்லைநகர் 10வது குறுக்கு தெருவில் இசாப் என்ற சிறு முதலீட்டு வங்கி உள்ளது. இதன் அருகில் அதன் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியின் மேலாளர் ராமானுஜம்(39) நேற்று பணிக்கு வந்த போது ஏடிஎம் இயந்திரத்தின் மானிட்டர் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் ஆய்வாளர் சிந்துநதி மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டு அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து, சிசிடிவியில் பதிவை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்த நஸ்ருதீன் என்பவரது மகன் அசாரூதீன்(20) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் அவரை துறையூர் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.