Categories: தமிழகம்

முதல்வருக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து மருந்துவமனைக்கு வந்த பெண் படுகாயம்: எப்போது ஒழியும் இந்த பேனர் கலாச்சாரம்?

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்க வைத்திருந்த டிஜிட்டல் பேனர் விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவை மற்றும் கர்ப்பிணிகளுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி கண்டறியும் மருத்துவப் பரிசோதனை திட்டத்தை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், முதலமைச்சரை வரவேற்க பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஓமந்தூரார் மருத்துவமனை வாயிலில் மருத்துவமனை சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்து.

அப்போது அந்த வழியாக நடந்து சென்ற பெண் ஒருவர் மீது அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று, திடீரென சரிந்து விழுந்ததில் அந்தப் பெண்ணுக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் தனது கணவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கடைக்குச் சென்றபோது பேனர் மேலே விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையிலும், பேனர் கலாச்சாரம் ஒழிந்தபாடில்லை. இதனால் பலர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

கில் உடன் மனக்கசப்பு… பாலிவுட் நடிகர் பக்கம் சாய்ந்த சச்சின் மகள்..!

கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…

17 minutes ago

நடிப்புக்கு டாட்டா காட்டும் ரஜினிகாந்த்? லதா ரஜினிகாந்த் சொன்ன தீடீர் தகவல்…

நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…

24 minutes ago

அபாய கட்டத்தை தாண்டிய ரெட்ரோ? என்னைய காப்பாத்திட்டீங்க-சூர்யா ஹேப்பி அண்ணாச்சி!

கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…

1 hour ago

‘நீயா நானா’ கோபிநாத் விலகுவது உறுதி..? அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…

2 hours ago

தன் வாயால் தானே கெட்ட விஜய் தேவரகொண்டா! பாய்ந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்?

இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…

2 hours ago

This website uses cookies.