கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மாம்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் கோவை தனியார் கல்லூரி MBA முதலாமாண்டு படிக்கும் 10 மாணவர்கள் ஒன்றாக குளிக்க சென்றனர். அவர்களில் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கனிஷ்க் (24), கரூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் ராஜதுரை (24), கோவை சூலூர் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் மகன் சுரேந்திரன் (24) ஆகியோர் எதிர்பாராத விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
அவர்களை தீயணைப்புத்துறையினர் பரிசல் ஓட்டிகளின் உதவியுடன் தேடி வந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையம் சாமண்ணா வாட்டர் டேங்க் அருகே ராஜதுரையும், வெள்ளிப்பாளையம் இரண்டாம் பவானி துணை மின் நிலையம் அருகே கனிஷ்க்கையும் குத்தாரிபாளையம் அருகே சுரேந்திரன் உடலையும் சடலமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட மூவரின் உடல்களும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இறந்த மாணவர்களின் சடலத்தை பார்த்த பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…
தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
This website uses cookies.