வேடசந்தூர் அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கரூர் – திண்டுக்கல் நெடுஞ்சாலையில், வேடசந்தூர் அரசு போக்குவரத்து பணிமனை அருகே நாகம்பட்டியில் இருந்து வேடசந்தூருக்கு ஒரு இருசக்கர வாகனத்தில் மதன்குமார் மற்றும் வினோத் பாண்டி ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திண்டுக்கலில் இருந்து வேடசந்தூர் நோக்கி வந்த கார் ஒன்று திடீரென சாலையை கடந்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், காரின் மீது நேருக்கு நேராக மோதியுள்ளனர். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மதன்குமார் மற்றும் வினோத் பாண்டி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.