மதுரை : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை மாட்ட ஆணி மற்றும் சுத்தியுடன் வந்த பாஜக மாவட்ட தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மாநில அரசு மூலமாக நிறைவேற்றி வருகிறது. இந்தத் திட்டங்களை நிறைவேற்றும் மாநில அரசு அலுவலகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை மாட்ட வேண்டும் எனக் கோரி பாஜக மாவட்ட தலைவர் சரவணன் பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் தலைவர் அனீஸ் சேகரிடம் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை கொடுத்து மாட்டி வைக்குமாறு கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் சரவணன் கூறுகையில் தமிழகத்தில் மத்திய அரசின் எண்ணற்ற திட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி வருகிறது. அதற்கு மத்திய அரசிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் அனுப்பப்படுகிறது.
மாநில அரசு அலுவலகங்களில் தமிழக முதல்வரின் புகைப்படம் வைத்திருப்பது போல பிரதமர் புகைப்படமும் மாட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம், என்றார்.
இன்று மாவட்ட ஆட்சியரின் குறைதீர் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் பிரதமர் புகைப்படம், ஆணி மற்றும் சுத்தியுடன் மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினர் வழங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.