Categories: தமிழகம்

முன்ஜாமீன் ரத்து… மதக்கலவரத்தை தூண்டியதாக பாஜக நிர்வாகி சென்னையில் கைது : என்னதான் நடந்தது..? முழு விபரம்!!

அரசு குறித்து போலி தகவல்களை பரப்பியதாக பாஜக நிர்வாகி சவுதா மணி கைது செய்யப்பட்டார்.

நாட்டில் உள்ள மத நல்லிணக்கத்தையும்,பொது அமைதியையும் சீர்குலைக்கும் வகையில்,சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த வேளையில், இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேசும் வீடியோவை தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதாமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதனால்,அவர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதனையடுத்து,இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுதாமணி மனு தாக்கல் செய்தார். ஆனால், இவரது செயல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக கூறி, முன் ஜாமீன் கேட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில், அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் போலி தகவல்களை பதிவிட்டதாக கூறி பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக, கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சவுதா மணி மீது வழக்குபதிவு செய்திருந்த நிலையில், தற்போது அவரை சென்னை மத்திய சைபர் கிரைம் போலீசார் செய்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.