அரசு குறித்து போலி தகவல்களை பரப்பியதாக பாஜக நிர்வாகி சவுதா மணி கைது செய்யப்பட்டார்.
நாட்டில் உள்ள மத நல்லிணக்கத்தையும்,பொது அமைதியையும் சீர்குலைக்கும் வகையில்,சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த வேளையில், இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேசும் வீடியோவை தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதாமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதனால்,அவர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
இதனையடுத்து,இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுதாமணி மனு தாக்கல் செய்தார். ஆனால், இவரது செயல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக கூறி, முன் ஜாமீன் கேட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் போலி தகவல்களை பதிவிட்டதாக கூறி பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக, கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சவுதா மணி மீது வழக்குபதிவு செய்திருந்த நிலையில், தற்போது அவரை சென்னை மத்திய சைபர் கிரைம் போலீசார் செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.