தமிழகம்

2 முறை கருக்கலைப்பு.. திருமணத்திற்கு வற்புறுத்திய இளம்பெண் : நடுக்காட்டில் பயங்கரம்!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி – பன்றிமலை அமைதி சோலை அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே 13.04.25 அன்று 22 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் இருப்பதாக அங்கு கால்நடை மேய்ச்சல் செய்பவர்கள் கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதுகுறித்து கன்னிவாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மதுரையில் பெற்றோர் இல்லாமல் சக்தி விடியல் ஆசிரமத்தில் மாரியம்மாள் என்பவர் வளர்ந்துள்ளார்.

இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!

12ஆம் வகுப்பு முடித்து பின்பு மதுரையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது, திண்டுக்கல் நத்தம், சாணார்பட்டி எமகாலபுரத்தை சேர்ந்த பிரவீன் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது.

பின் பிரவீன் மற்றும் மாரியம்மாள் இணைந்து திண்டுக்கல்லில் உள்ள தனியார் துணிக்கடையில் (Unlimited) வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

பிரவீன் பாதுகாவலராக கையெழுத்திட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் மாரியம்மாளை சேர்த்து விட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடங்களாக திண்டுக்கல்லில் இருவரும் இருந்துள்ளனர். இரண்டு முறை மாரியம்மாள் தனது கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாரியம்மன் பிரவீனை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், காதலியான மாரியம்மாளை அமைதி சோலை அருகே கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின் கொலையை மறைக்க பெட்ரோல் ஊற்றி உடலை எரித்துள்ளார்.

மேலும் எரிந்த நிலையில் கிடைக்கப் பெற்ற பெண்ணின் சடலம் யார் என்று தெரியாத நிலையில் பெண்ணின் அடையாளங்களை காவல்துறையினர் வெளியிட்டனர்.

பிரவீன் தான் காவல்துறையினரிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக காவல் நிலையத்திற்கு அவரை சென்று காவல்துறையினர் தெரிவித்த அடையாளம் தனது காதலி என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின் காவல்துறையினருக்கு பிரவீன் மீது சந்தேகம் ஏற்பட அவரை விசாரணை வலையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். விசாரணையில் தான் கொலை செய்ததையும், மறுநாள் சென்று உடலை எரித்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் பிரவீன் எவ்வாறு கொலை செய்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.